கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிளி ஜோசியர் செக்ஸ் தொல்லை.. 5 குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு.. தூக்கில் தொங்கிய பெண்!

கிளி ஜோசியர் பாலியல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

குளித்தலை: கிளி ஜோசியரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் சங்கீதா, தன்னுடைய 5 குழந்தைகளையும் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்த தம்பதி தங்கவேல் - சங்கீதா. இவர்களுக்கு பெரியநாயகி 13, பாண்டி மீனா 11, சந்தோஷ்குமார் 9, பொன்னர் 5, ரத்தினம் 3, ஆகிய 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.

Young widow commits suicide due to sex torture near Karur

சங்கீதாவுக்கு வயசு 29. கடந்த ஆண்டு தங்கவேலு மாரடைப்பால் இறந்துவிட்டார். அதனால் குழந்தைகளுடன் சங்கீதா தனியாக வசித்து வந்தார்.

இவர் வீட்டுக்கு பக்கத்தில் சங்கர் என்ற கிளி ஜோசியர் குடியிருந்தார். சங்கருக்கு வயசு 30. சங்கீதா தனியாக இருப்பதால், அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை தந்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் அசிங்கம் ஆகிவிடும் என்று பயந்து போன சங்கீதா ஊரையே காலி செய்து கொண்டு, கீழ வெளியூரில் வசிக்கும் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால் சங்கர் விடவேயில்லை.. அந்த ஊருக்கும் துரத்தி கொண்டு வந்து பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.

இதனால் மனம் உடைந்த சங்கீதா தரிசு காட்டில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கீதாவின் தம்பி சதீஷ் தோகைமலை போலீஸில் புகார் செய்துள்ளதை அடுத்து சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தனைக்கும் இந்த கிளி ஜோசியர் சங்கருக்கு கல்யாணம் ஆகி மனைவி, 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து இவரிடம் விசாரணை நடக்கிறது. ஆனால் 5 குழந்தைகளும் அம்மா இல்லாமல் தவித்து அழுவதை கண்டு கிராம மக்கள் கண்கலங்கி நின்றனர்.

English summary
Young Widow has committed suicide because of Astrologer's sex torture near Karur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X