குழந்தை பிறந்தும்.. குடித்தனம் நடத்த கூட்டி செல்லாத கணவர்.. குழந்தையை நீரில் மூழ்கடித்து தற்கொலை
கரூர்: குழந்தை பிறந்து, புருஷன் தன்னை மாமியார் வீட்டுக்கு கூட்டிகொண்டு போகலையாம்... அதுக்காக இப்படியா செய்யறது? பிறந்த குழந்தையை தண்ணி தொட்டிக்குள் அமுக்கி கொன்றே விட்டார் பெற்ற தாய்!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ். பெங்களூரில் உள்ள ஹோண்டா கம்பெனியில் என்ஜினியராக உள்ளார்.
இவரது மனைவி மனோ பிரியா. 28 வயதாகிறது. பிரசவத்துக்காக பிரியா பெங்களூரிலிருந்து கரூர் மாவட்டம் சங்கரன் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு வந்திருக்கிறார். அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. மொகிதா என்று பெயர். இப்போது 11 மாதமாகிறது.
உன் புருஷனை தூக்கறேன்.. கேஸ் வாபஸ் வாங்கிட்டு ஓடிடு.. பெண்ணை மிரட்டும் பார் நாகராஜ் ஆடியோ
சில நாட்களாகவே தன்னை பெங்ளூருக்கு அழைத்து செல்லுமாறு பிரியா, மகேஷை தொந்தரவு செய்து கொண்டே வந்திருக்கிறார். ஆனால் மகேஷ் அழைத்து செல்லவே இல்லை. இதனால் சில தினங்களாகவே பிரியா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இன்று காலை வீட்டில் இருந்தவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் நுழைந்தபோது, மனோ பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின்னர் குழந்தை எங்கே என்று தேடியபோது, தண்ணீர் தொட்டியில் குழந்தையை அமிழ்த்தி கொலை செய்யப்பட்டதையும் கண்டு மேலும் உறைந்தனர். உடனடியாக வாங்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் தாய்-குழந்தையின் உடல்களை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
பெற்ற தாயே குழந்தையை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.