கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அனிதா உடம்புல காயம் இருக்கு.. என் மகளை கொன்னுட்டாங்க.. சாலை மறியல்.. கலங்கிபோன கரூர்

Google Oneindia Tamil News

Recommended Video

    தற்கொலை இல்லை, இது கொலை ! மறியல் செய்த பெற்றோர்

    கரூர்: "அனிதாவின் உடம்புல காயங்கள் இருக்கு.. தற்கொலைன்னு பொய் சொல்றாங்க.. என் பொண்ணை கொன்னுட்டாங்க" என்று இளம் பெண்ணின் பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர். உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி உறவினர்கள், பொதுமக்கள் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி மறியலில் ஈடுபட முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர் மாவட்டம், காட்டுமுன்னூர் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர், ஆதிரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.

    இவரது மகன் ஜீவானந்தம், 29 வயதாகிறது. தென்னிலையில் உள்ள ஒரு பிரைவேட் காலேஜில் உதவி பேராசிரியாக உள்ளார். கடந்த ஆண்டு நெரூர் பகுதியை சேர்ந்த அனிதா என்பவருடன் ஜீவானந்தத்துக்கு திருமணம் நடந்தது.

    கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட தம்பி... அடித்துக்கொன்ற அண்ணன் அண்ணி கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட தம்பி... அடித்துக்கொன்ற அண்ணன் அண்ணி

    தற்கொலை

    தற்கொலை

    இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென அனிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதை கேட்டு பதறியடித்து கொண்டு வந்த அனிதாவின் பெற்றோர், மகளின் உடலை கண்டு கதறி அழுதனர்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    பின்னர், க.பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு உறவினர்களுடன் சென்ற அவர்கள், "மகளின் உடம்பில் காயங்கள் இருக்கு. தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. இது சம்பந்தமாக உரிய விசாரணை எடுத்து, மகளின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்" என்று புகார் அளித்தனர்.

    விசாரணை

    விசாரணை

    கல்யாணம் ஆகி ஒரு வருடத்திலேயே பெண் இறந்துள்ளதால், இந்த வழக்கு பற்றி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது இரு தரப்பிலும் விசாரணைக்காக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    நொறுக்கினர்

    நொறுக்கினர்

    அதன்படி ஜீவானந்தம், அவரது அம்மா லட்சுமி விசாரணைக்காக அங்கு காரில் வந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த அனிதாவின் பெற்றோர், உறவினர்கள், அவர்கள் அமர்ந்திருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

    மறியல்

    மறியல்

    "என் மகளை கொன்றது இவங்க ரெண்டு பேரும்தான்.. வரதரட்சணைக்காக கொன்றுவிட்டார்கள்.. இப்போது தற்கொலை என்று நாடகமாடுகிறார்கள்" என்று ஆவேசமாக கூறினர். பிறகு ஒட்டுமொத்த அனிதாவின் குடும்பமும் மறியலிலும் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் பேசினர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜீவானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    English summary
    Young woman suicide for dowry torture and husband arrested near Karur nad police inquiry is going on
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X