கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்த இரட்டை 'அரிய' குழந்தைகள்
கிருஷ்ணகிரி: அரிதான வகையில் தலை ஒட்டியபடி ஆண் குழந்தைகள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறதாம்.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான், அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை
அறுவை சிகிச்சை
இந்த நிலையில் சுகப்பிரசவம் செய்ய முயற்சித்த நிலையில் வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அப்போது, சுஷாந்திக்கு பிறந்தது 2 ஆண் குழந்தைகளாம்.
தலைகள்
இதனை கண்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வியந்து போனார்கள். பிறந்த குழந்தைக்கு நான்கு கால்கள் நான்கு கைகள் தனித்தனியே இரண்டு பிறப்புறுப்புகள் இருந்த நிலையில், தலை மட்டும் ஒன்றாக இருந்தது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
ஆரோக்கியம்
பிறந்த குழந்தைகள் நன்றாக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், பிறந்த இரண்டு குழந்தைகளும் ஆண் குழந்தைகளாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த குழந்தைகளின் தலைகள் ஒன்றிணைந்து இருப்பதால் எப்படி இதை கையாள்வது என மருத்துவர்கள் திகைத்துப்போயுள்ளனர்.
வேறு மாநிலம்
குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருந்தாலும் தீவிர கண்காணிப்பில் பாதுகாத்து வருகின்றனர். குழந்தைகளைப் பெற்ற தாய் மற்றும் தந்தை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றுக் கூறப்படுகிறது. வேலைக்காக, தமிழகத்துக்கு வந்திருந்தனர். கொரோனா காலம் என்பதால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாத காரணத்தினால் தமிழகத்திலேயே குழந்தையை பெற்றெடுத்ததாக குழந்தையின் தந்தை சுகுமாரன் கூறியுள்ளார்.