கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோமதி ஆண்ட்டியின் அட்ராசிட்டி... ஏரிக்கரையில் பழனிசாமியுடன்.. மிரண்டு போன தியாகதுருவம்..!

கிருஷ்ணகிரி அருகே இளைஞரை கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: ஏரிக்கரை பக்கம் ராத்திரி நேரம் இளைஞரை அழைத்து சென்றுள்ளார்.. பிரியாணி சாப்பிட்டுள்ளார்.. ஜாலியாக இருந்துள்ளார்.. கடைசியில் அந்த இளைஞரை கொலை செய்துவிட்டு கிளம்பிவிட்டார் விபச்சாரம் செய்யும் கோமதி!

கிருஷ்ணகிரி மாவட்டம், மணடிப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி.. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூர் என்ற கிராமத்தில் ஒரு ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார்.

45 year old woman killed youth near Krishnagiri

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தியாகதுருவத்தை அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் பழனிசாமி பிணமாக கிடந்தார்.. அவரது கழுத்தை யாரோ நெரித்து கொன்றது தெரியவந்தது.. ஆனால் யார் கொன்றார்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து தியாகதுருவம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினர்.. உடனடியாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதலில் ஸ்வீட் கடையில் விசாரித்தபோது, பழனிசாமிக்கு பல விபச்சார அழகிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.. அதில் கோமதியின் பெயர் பிரதானமாக அடிபட்டது.. கோமதிக்கு 45 வயதாகிறது.. இவருக்கும் பழனிசாமிக்கும் நீண்ட காலமாகவே கள்ள உறவு இருந்திருக்கிறது. கோமதி விபச்சாரம் செய்து வருபவராம்.. சம்பவத்தன்று 2 பேரும் ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர்.

போகும்போதே ஓட்டலில் பிரியாணி பொட்டலத்தை வாங்கி கொண்டு போயுள்ளனர்.. ஏரிக்கரையில் இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.. பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.. அப்போதுதான் மதுவை ஊற்றி கொடுத்துள்ளார் கோமதி.. அந்த மதுவில் தூக்க மாத்திரையை கலந்து வைக்கவும், அதை குடித்து பழனிசாமி குடித்துவிட்டார்.. ஆனால் அவருக்கு மயக்கமே வரவில்லை.

மயங்கி விழுந்து இறந்துவிடுவார் என்று பொறுத்து பொறுத்து கோமதி, கடைசியில், தன்னுடைய சேலையால் பழனிசாமியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார்.. இறுதியில் அவரிடமிருந்த 3,500 ரூபாய் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார் என்பதும் கோமதியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்யப்பட்டார்.

அப்போது போலீசாரிடம் கோமதி அளித்த வாக்குமூலத்தில், "நான் விபசார தொழில் செய்து வருகிறேன்... என்னுடன் வரும் ஆண்களுக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து தருவேன்.. அவர்கள் கொஞ்சம் தூங்கியதும், பணம், செல்போனை திருடிச்சென்று விடுவேன்... பழனிசாமிக்கும் அப்படித்தான் செய்தேன்.. அவர் மயங்கி விழாததால், என் சேலையால் கழுத்தை நெரித்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

English summary
45 year old woman killed youth near Krishnagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X