வயசோ 70.. கை வைக்குற 'இடமா' இது.. கிருஷ்ணகிரியை அலற விட்ட தேவராஜ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 70 வயது நபர் ஒருவர் செய்த செயல் ஏரியாவை அலற வைத்துள்ளது. இப்படியும் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது அந்த சம்பவம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் தேவராஜ். இவருக்கு 70 வயது ஆகிறது.
Recommended Video
பல்வேறு உடல்நல உபாதைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் உள்ளார் தேவராஜ். ஆனால் உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க ஆளில்லை.
சிகிச்சை கிடைக்கவில்லை
இந்த சூழலில் மருத்துவ உதவி சீராக கிடைக்கவில்லை என்ற விரக்தியில் வீட்டில் தனிமையில் இருக்கும்போது தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார் தேவராஜ். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த வழிமுறை ரொம்பவே கொடூரமான ஒரு வழிமுறை. தூக்குபோட்டோ, வேறு வகையிலோ தற்கொலை செய்ய அவர் முடிவெடுக்கவில்லை.
அறுத்துவிட்டார்
தற்கொலை செய்ய முடிவு செய்த தேவராஜ், தனது பிறப்பு உறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் வலி காரணமாக துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.
அண்டைவீட்டுக்காரர்கள்
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் அவர் அலறித் துடித்ததை பார்த்த அண்டை வீட்டார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை
மேலும் மேல்சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டதால் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.