கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி

Google Oneindia Tamil News

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே இயற்கை உபாதைக்காக சென்றவர் சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை சாலையோரத்தில் வைக்க நினைத்து கையில் எடுத்தபோது ஷாக் அடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் இன்று காலை இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டம் அருகே சென்றுள்ளார்.

A man gets shock from electric wire when he tries to discard in Uthangarai

நள்ளிரவு சிங்காரப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இடியுடன் கனமழை பெய்த நிலையில் அந்த பகுதியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை பார்த்த ரவி சமூக அக்கறையுடன் அந்த கம்பியை எடுத்து சாலையின் ஓரத்தில் வைப்பதற்காக எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பியில் இருந்த மின்சாரம் ரவி மீது பாய்ந்தது.

ஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல்ஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல்

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

English summary
A man gets electric shock from electric wire and died in Uthangarai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X