கோலாகல விற்பனையில் கிருஷ்ணகிரி பொரி... செம பூரிப்பில் விற்பனையாளர்கள்!!
Recommended Video
கிருஷ்ணகிரி: ஆயுத பூஜைக்காக வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது கிருஷ்ணகிரி பொரி. பொரி விற்பனை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜையையொட்டி, பொரி தயார் செய்யும் பணிகளில் தொழிலாளிகள் தீவிரம் காட்டியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து அரிசி வாங்கி வரும் இவர்கள், அரிசியை சுத்தம் செய்து பதப்படுத்தி, பின்னர் பொரியாக இயந்திரம் மூலம் தயாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொரி அதிக சுவையுடனும், மணத்துடனும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு பொரி மூட்டைகள் அனுப்பப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து அரிசியாக வாங்கி வந்து பொரி தயாரிப்பதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சற்று கூடி உள்ளது, மூட்டை ரூ.350 முதல் 400 வார பொரி விற்பனை செய்யப்படுகிறது.
கல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி
வெளி மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் சேலம், தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆடர்கள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த ஆண்டு பொரி விற்பனை அதிகரித்திருப்பதாக பொரி உற்பத்தியாளர் கிருஷ்ணன் கூறினார்.