கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் சிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி!

அட்லி மற்றும் நடிகர் விஜய்யுடன் வேலை செய்வது சொந்த மண்ணில் விளையாடுவது போல இருந்தது என பிகில் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 மாத பெண் சிசுவிற்கு பாலில் குருணை கலந்து கொடுத்த குழந்தையின் பாட்டி-வீடியோ

    கிருஷ்ணகிரி: "போய்வாடி அன்னக்கிளி" என்று 2 மாத பிஞ்சு குழந்தைக்கு குருணை கலந்த பாலை ஊற்றி கொன்றே விட்டார் இந்த "பாய்சன் பாட்டி"!

    அத்தி பூத்தது போல வரும் அருமையான படங்களில் ஒன்று கருத்தம்மா.. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, தேசிய விருது வழங்கப்பட்ட சினிமா. பெண்குழந்தைகளின் அவல நிலைமையை விளக்கிய அருமையான படம்.

    பெண் குந்தைகளை கள்ளிப்பாலை ஊற்றி கொன்று வந்த காலகட்டத்தில், சரியான நேரத்தில், சரியான சவுக்கடியாக வெளிவந்த படம். இந்த படம் வெளியான பிறகு, ஓரளவு பெண் குழந்தைகள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டது உண்மையே.. ஆனால், இந்நிலை மீண்டும் தலையெடுக்க துவங்கி உள்ளது.

    குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி

    பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்த புரிதல் இல்லாததால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையும் இல்லாததால்தான் இந்த அவலம் நீடிக்கிறது. கிருஷ்ணகிரியில் இப்படி ஒருசம்பவம் நடந்துள்ளது.

    பெண் குழந்தை

    பெண் குழந்தை

    பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சத்யா தம்பதி. இவர்களுக்கு ஸ்ரீமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 2 மாசத்துக்கு முன்பு இவர்களுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்ததில் இருந்தே வருத்தமாக இருந்தனர் தம்பதியினர்.

    புகார்

    புகார்

    இந்த நேரத்தில், மாசம் ஒருமுறை தடுப்பூசி போடும் நர்ஸ் ஒருவர் நாகர்குட்டை கிராமத்திற்கு வந்தார். குழந்தை எங்கே என்று கேட்டதற்கு, என் அக்கா வீட்டில் தந்திருக்கேன் என்று வேற வேற காரணம் கூறி சமாளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த நர்ஸ் டாக்டர் ஹரிராம் என்பவரிடம் இதை பற்றி சொல்ல, டாக்டரோ போலீசுக்கு புகார் தந்துவிட்டார்.

    பொட்டியம்மாள்

    பொட்டியம்மாள்

    பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் பாட்டிதான் அதை கொன்றுவிட்டதாக விஷயம் வெளியானது. அந்த பாட்டி பெயர் பொட்டியம்மாள். குழந்தைக்கு பாலில் குருணை கலந்துகொடுத்து கொலை செய்துள்ளார். புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்த போலீசார் ஆய்வுக்கு அனுப்பிதும்தான் பாட்டி செய்த காரியம் உண்மை என்றும் மீண்டும் நிரூபணமானது. இதையடுத்து பொட்டியம்மாள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

    English summary
    grandma murdered her 2 month old grand daughter near krishnagiri and arrested now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X