தாயை அடித்த பெரியப்பாவை வெட்டிக் கொன்ற வாலிபர்.. ஒசூர் அருகே பரிதாபம்
Recommended Video
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே,சொத்து தகராறு காரணமாக பெரியப்பாவை வெட்டி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த புக்கசாகரம் ஊராட்சிக்குட்பட்ட ஆப்ரி கிராமத்தை சேர்ந்தவர் மோட்டப்பா (70), இவரது தம்பி மகன் சிவபிரகாஷ், இவரின் அருகே உள்ள நிலத்தில் மோட்டப்பா மகன் முனிராஜ் வீடு கட்டி வருகிறார்.
அதன் காரணமாக மோட்டப்பா குடும்பத்திற்க்கும் சிவபிரகாஷ் குடும்பத்திற்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில், நேற்று மோட்டப்பா, சிவபிரகாஷின் அம்மாவை அடித்ததாக சொல்லப்படுகிறது.
இதையறிந்து, ஆத்திரமடைந்த சிவபிரகாஷ், தனது பெரியப்பா என்றுக்கூட பார்க்காமல் மோட்டப்பாவை அரிவாளால் பலமாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் அலறிய மோட்டப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தலைமறவாகிய சிவபிரகாஷை சூளகிரி போலீசார் தனிப்படை அமைத்து ஓசூரில் கைது செய்துள்ளனர். மோட்டப்பா உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விசாரணை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
சொத்து தகராறு காரணமாக 70 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆப்ரி கிராம பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.