கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்

பெற்ற குழந்தைக்கு மதுவை ஊற்றி தந்து சரமாரியாக அடித்துள்ளார் பெற்ற தாய்

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: உச்சத்துக்கு ஏறிய நந்தினியின் காமம்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பெற்ற பெண் குழந்தைக்கு மதுவை ஊற்றி தந்து.. அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளார்... 3 வயது அந்த அந்த பிஞ்சு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.. இந்த சம்பவம் தமிழக மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ளது பாகலூர் ஜீவா நகர்.. இங்கு வசித்து வருபவர் நந்தினி.. 6 வருடங்களுக்கு முன்பு மாதேஷ் என்பவருடன் நந்தினிக்கு கல்யாணம் ஆகிவிட்டது.. மூன்று வயதில் நயனா ஸ்ரீ என்ற மகள் இருக்கிறாள்.

ஆனால், கணவனுடன் சண்டை போட்டுவிட்டு தனியாக வசித்து வருகிறார்.. அப்போதுதான் அசோகன் என்பவருடன் நந்தினிக்கு கள்ள உறவு பற்றிக் கொண்டது. இவர்கள் 2 பேருமே தினமும் ஒன்றாகத்தான் தண்ணி அடிப்பார்களாம்.. அதன்பிறகு ஜாலியாக இருப்பார்களாம்.. அதேபோல்தான் நேற்றும் மது அருந்தி உள்ளனர்.

 ஜான் சரியா பால் குடிக்கலை.. அழுதுட்டே இருந்தான்.. ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த ரேவதி.. மடக்கிய போலீஸ்! ஜான் சரியா பால் குடிக்கலை.. அழுதுட்டே இருந்தான்.. ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்த ரேவதி.. மடக்கிய போலீஸ்!

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

குழந்தை அப்போது அழுது கொண்டிருந்தது.. இதனால் எரிச்சலும், போதையும் அதிகமாகிவிட்ட கள்ளக்காதலர்கள், அந்த குழந்தைக்கு மதுவை ஊற்றியுள்ளனர்...நந்தினி மதுவை ஊற்றியும், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்பதால், அதனை சரமாரியாக அடிக்க தொடங்கி விட்டார்.. இதனால் குழந்தை மேலும் அதிகமாக கதறியது.

ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

ரொம்ப நேரமாக குழந்தை அழும் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. அப்போதுதான் நடந்த கொடுமையை கண்டு அதிர்ந்து, குழந்தையை மீட்டு பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்தனர்.. ஆனால் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அங்கிருந்த மருத்துவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.

ரத்த வாந்தி

ரத்த வாந்தி

குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.. அந்த சமயத்தில்தான் அவளது உடம்பில் பல இடங்களில் காயங்களும், தழும்புகளும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்... ரத்தவாந்தியுடம் குழந்தை எடுத்திருக்கிறாள்... வெறும் மதுதான் குழந்தைக்கு ஊற்றப்பட்டதா, அல்லது விஷம் ஏதேனும் கலந்து ஊற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைந்து அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணை

விசாரணை

குழந்தைக்கு ரத்த வாந்தி ஏற்பட காரணம் என்ன? விஷம் கலந்து தரப்பட்டதா உள்ளிட்ட கோணங்களில் ஓசூர் மகளிர் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. கள்ளக்காதலர்கள் 2 பேரும் போலீசாரின் பிடியில் இப்போது உள்ளனர்! அசோகனிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அம்மா.. அம்மா..

அம்மா.. அம்மா..

இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், குழந்தைக்கு, பெற்ற தாயே மதுவை ஊற்றி அடித்து கொடுமைப்படுத்தியபோதும், குழந்தை "அம்மா... அம்மா" என்று கூப்பிட்ட அழுது கொண்டே இருந்தது டாக்டர்களை மட்டுமல்லாது, சுற்றியிருந்த பொதுமக்களின் கண்களையும் குளமாக்கி விட்டது!

English summary
hosur mother and her illegal lover feed alcohol to 3 year old girl baby and arrested now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X