சாந்தி மீது ஏகப்பட்ட சந்தேகம்.. சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. வாலிபரின் கொடூர செயல்
மனைவியை கொடூரமாக அடித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
கிருஷ்ணகிரி: சாந்தி மேல இளையராஜாவுக்கு ஏகப்பட்ட சந்தேகம்.. அதனால்தான் சுத்தியால் அடித்தும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் மிக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் வசித்து வந்தவர் சாந்தி. இவர் கணவர் இளையராஜா. துபாயில் வேலை பார்க்கிறார்.
சாந்தி, இங்கு ஒரு பியூட்டி பார்லர் வைத்தி நடத்தி வந்தார். 15 நாளைக்கு முன்னாடிதான் இளையராஜா துபாயில் இருந்து வந்திருந்தார். இந்த பகுதிக்கு இப்போதுதான் புதுசாக குடி வந்திருக்கிறார்கள்.
வந்த நாள் முதல் ரெண்டு பேருக்கும் தினமும் சண்டை வந்து கொண்டே இருந்திருக்கிறது. நேற்று ராத்திரியுடம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. அதனால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் சொன்னார்கள். அதன் பேரில் அவர்கள் வந்து கதவை திறந்து பார்த்தால், சாந்தி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார்.
தலையில் பலத்த காயத்துடனும் அருகில் உள்ள ஜன்னல் கம்பியில் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தவாறு சடலமாகவும் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இளையராஜா எஸ்கேப் ஆகி இருந்தார். உடனடியாக இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் சொல்லவும், விரைந்து வந்த அவர்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
சாந்தியின் தலையில் சுத்தியால் அடித்தும் கயிற்றால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இந்த பகுதிக்கு இப்போதுதான் குடிவந்துள்ளதால், இவர்களை பற்றி யாருக்குமே சரியான விவரம் தெரியவில்லை. அதனால் தப்பியோடிய இளையராஜாவை போலீசார் தேடி வருகிறார்கள்.