கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முறிக்கப்பட்ட காதல்.. மனம் உடைந்து போன ஜோடி.. தண்டவாளத்தில் பறிபோன உயிர்!

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓசூர்.. ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை-வீடியோ

    கிருஷ்ணகிரி: காதல் ஜோடியின் உடல்கள் தண்டவாளத்தில் சிதறி கிடந்ததை பார்த்து பொதுமக்கள் கதறி, கதறி அழுதனர்.

    ஓசூர் அருகே இராமச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லேஷ். இவர் அதே கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்ற பெண்ணை கடந்த 2 வருஷங்களாக காதலித்து வந்துள்ளார்.

    Lovers committed suicide near Hosur

    ஜோதி, எல்லேஷ்-க்கு சொந்தக்காரர் என்று கூறப்படுகிறது. வீட்டில் ரெண்டு பேரும் போய் தங்கள் காதலை சொல்லி உள்ளனர். ஆனால் இரு தரப்பிலும் அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

    அது மட்டுமல்லாது, ஜோதிக்கு வேற இடத்தில் கல்யாண ஏற்பாடுகளும் நடக்க ஆரம்பித்துள்ளது. இதனால் காதல் ஜோடி, வேறு வழி தெரியாமல் நடுராத்திரி வீட்டை விட்டு வெளியேறியேறி உள்ளனர். காருக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து இருவருமே தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை தகவல் அறிந்து உறவினர்களும், கிராம மக்களும் திரண்டனர். காதல் ஜோடியின் உடல்கள் உடல் சிதறி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு கதறி அழுதனர்.

    ஜோதி-எல்லேஷ் இருவரின் சிதறி கிடந்த உடல் பாகங்களை ஓசூர் ரயில்வே போலீசார், மீட்டு, அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.

    English summary
    Lovers committed suicide near Hosur due to love family issue, and police investigation is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X