கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    ரூ 3 கோடி சொத்தை பறித்த மகன்.. தாய்- தந்தையை மனைவியுடன் சேர்ந்து விரட்டிய கொடூரம்

    கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தாய், தந்தையிடமிருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பெற்றுக் கொண்டு, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டிய மகனிடமிருந்து சொத்தை மீண்டும் வாங்கி, பெற்றோரிடம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்குமார். தனது கிட்னி செயல் இழந்த நிலையில் உயிருக்கு போராடிய அருண்குமாருக்கு, தாய் தனது கிட்னியை தானமாக வழங்கி காப்பாற்றி உள்ளார்.

    Revenue Divisional Officer retrieves Rs 3 crore worth assets and give it back to elderly couple

    பின்னர் திருமணம் செய்து கொண்ட அருண்குமாருக்கு, பெற்றோர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள 10 கடை உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான நிலங்களையும் தானமாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

    பின்னர் காலப்போக்கில் அருண்குமார் தனது மனைவியுடன் சேர்ந்து, பெற்றோர்களை வீட்டை விட்டு விரட்டி கொடுமைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.

    19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்19 வயசு முதல் 41 வயசு வரை மொத்தம் 5 ஆண்கள்.. கூட்டாக நடந்த கொடுமை.. 9ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம்

    பெற்ற ஒரே மகனால் பல்வேறு துன்பங்களுக்கு ஆளான பெற்றோர்கள், முதியோர் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்து இருந்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அருண்குமாருக்கு தானமாக பெற்றோர்கள் எழுதிக் கொடுத்த கடைகள் மற்றும் ரூபாய் மூன்றுக் கோடி மதிப்பிலான சொத்துக்களை, அருண்குமாரிடம் இருந்து திரும்ப பெற்ற கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் தெய்வநாயகி பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், இனிமேல் அருண்குமார் எக்காரணத்தைக் கொண்டும் தாய், தந்தையர்களிடம் இருந்து சொத்தை அபகரிக்கக் கூடாது. இதையும் மீறி சொத்தை அபகரித்தால், அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    English summary
    Revenue Divisional Officer retrieves Rs 3 crore worth assets and handed over to elderly couple whose son snatched that assets from them
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X