வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும் என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
கிருஷ்ணகிரி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும் என்று துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக, திமுக தனது பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறது.
துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் கே.பி முனுசாமியை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.
என்ன கூறினார்
ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தில், திமுக சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது. ஏற்கனவே இந்த வாக்குறுதியை பலமுறை அவர்கள் அளித்து இருக்கிறார்கள். அப்போது செலவு செய்த பணம் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. அனைத்தையும் திமுகவினர் திருடி விட்டார்கள்.
வைகோ பேசினார்
வைகோ போன சட்டமன்ற தேர்தலில் கடுமையான சவால்விட்டார். திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். திமுகவை கடுமையாக விமர்சித்துவிட்டுதான் அவர்களுக்கு எதிராக வைகோ கூட்டணியே வைத்தார்.
ஸ்டாலின் பேச்சு
வைகோ ஸ்டாலினை வெற்றிபெற விட மாட்டேன். ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார். ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமரவிடமாட்டேன் என்று கூறினார். ஸ்டாலினை தேர்தலில் தோல்வி அடைய செய்வதே என் வேலை என்று வைகோ கூறினார்.
திமுகவுடன் கூட்டணி
ஆனால் இப்போது அதே திமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் வைகோ. அவர்கள் சின்னத்திலேயே போட்டியிடுகிறார். வைகோவிற்கு ஒரு ராசி இருக்கிறது. வைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும், என்று ஓ.பன்னீர்செல்வம் தனது பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.