"அடங்காத" சத்யா.. புருஷன் வேலைக்கு போனதும் செய்த பகீர் காரியம்.. கடைசியில் நடந்த கொடூரம்!
கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்
கிருஷ்ணகிரி: புருஷன் வேலைக்கு போனதுமே, காதலனை வீட்டுக்குள் வரவழைத்து விடுவாராம் சத்யா.. நாளடைவில், உறவுக்கு தடையாக இருப்பதால், தூங்கி கொண்டிருந்த கணவரை கொன்றே விட்டார் சத்யா!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகேயுள்ள பகுதி சீங்கோட்டை.. இங்கு வசித்து வந்தவர் தனபால்.. இவர் ஒரு கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி பெயர் சத்யா.. ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது.. இவர்கள் இருவரும் ஒசூர் அடுத்த பேகேப்பள்ளி பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென சத்யா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.. அதனால் அக்கம்பக்கத்தினர் பதறியடித்து கொண்டு உள்ளே சென்று பார்த்தால், தனபால் சடலமாக இறந்துகிடந்தார். பின்னர், சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும் அவர்கள் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் ஆரம்பித்தனர்.
ரூமுக்குள்.. கடைசி நேரத்தில் என்னாச்சு.. ஹேம்நாத்திடம் விசாரணை.. ஹேன்ட்பேக்கில் இருந்தது என்ன?
முதல் விசாரணையே சத்யாதான். ஆரம்பத்தில் ஏதேதோ உளறினார் சத்யா.. பிறகுதான் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும், ஒன்றுவிடாமல் நடந்ததை எல்லாம் சொல்லி விட்டார். மணிகண்டன் என்பவர் சத்யா வீட்டு பகுதியில் வசிக்கும் தன் நண்பனை சந்திக்க வருவாராம்.. அப்போதுதான் சத்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நட்பாக மாறி, அந்த நட்பு கள்ளக்காதலாக மாறிவிட்டது. தனபால் வேலைக்கு போனதுமே மணிகண்டன் சத்யா வீட்டுக்குள் வந்துவிடுவாராம்.
இதை அக்கம்பக்கத்தில் இருப்பர்கள் கவனித்துவிட்டு, தனபாலிடம் சொல்லி உள்ளனர்.. இதைதான் தனபால் சத்யாவிடம் கேட்டுள்ளார்.. மனைவியை கண்டித்தும் உள்ளார். இது சத்யாவுக்கு டென்ஷனை தந்தது.. அதனால், கணவனை கொல்வதே ஒரே வழி என முடிவு செய்தார்.. அதன்படி, நேற்று இரவு தனபால் தூங்க சென்றதும், உடனே மணிகண்டனுக்கு போன் செய்து வரவழைத்து, சேர்ந்தே தனபாலை கொலை செய்தார். இப்போது இந்த ஜோடி ஜெயிலில் உள்ளது.