கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்டிலில் இன்னொருவருடன் மனைவி.. தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன்.. கள்ளக்காதலனை அடித்தே கொன்ற அப்பா!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: கட்டிலில் இன்னொருவருடன் மனைவி இருப்பதை நேரிலேயே பார்த்துவிட்டார் சீனிவாசன்.. எதுவுமே பேசல.. நேராக போய் தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால், மருமகளுடன் கள்ளத்தொடர்பை வைத்திருந்த அந்த நபரை, தன் மகன் தற்கொலைக்கு காரணமான அந்த நபரை.. அடித்தே கொன்றுவிட்டார் சீனிவாசனின் தந்தை!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே தொட்டேஅள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மனைவி லட்சுமி.. சீனிவாசன் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.. கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது.. லட்சுமிக்கும் இப்போது வயது 27 ஆகிறது! இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்!

 worker murder due to illegal love near krishnagiri

இந்நிலையில், முரளி என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. முரளி ஒரு கட்டிட தொழிலாளி.. சீனிவாசன் வேலைக்கு சென்றுவிட்டால், முரளியை வீட்டுக்கு அழைத்துவிடுவார் லட்சுமி.. இப்படியே இருவரும் ஜாலியாக இருந்துள்ளனர்.

கடந்த 3 மாசத்துக்கு முன்பு ஒருநாள் திடீரென சீனிவாசன் வீட்டிற்குள் நுழையவும், முரளியும், லட்சுமியும்
கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை நேரில் பார்த்த சீனிவாசன் மனம் உடைந்து போய்விட்டார்.. உடனே தற்கொலையும் செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு தொட்டேஹள்ளி அருகே ரத்த காயங்களுடன் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் விரைந்து சென்று பார்த்ததில், அது முரளி என்பது தெரியவந்தது.. மேலும் சிறிது நேரத்தில் முரளியை கட்டையால் அடித்து கொன்றதாக சீனிவாசனின் தந்தை பர்சப்பா போலீசில் வந்து சரணடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், மருமகள் லட்சுமி, முரளியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.இது என் சீனிவாசனுக்கு ஏற்கனவே தெரியும்.. அதனால் 2 பேரையும் பலமுறை கண்டித்தான்.. ஆனாலும் 2 பேரும் திருந்தவில்லை.. ஒருநாள் நேரிலேயே பார்த்துவிடவும், அவன் தற்கொலை செய்து கொண்டான். எனக்கு மனசே ஆறல.

நேற்று முன்தினம் லட்சுமி கொத்தூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றபோது, பின்னாடியே போய் முரளி தொந்தரவு செய்தான்.. இது எனக்கு தெரிந்து முரளியை கண்டித்தேன்.. வாக்குவாதமும் நடந்தது.. பிறகு கண்டித்துவிட்டு வந்தேன்.. ஆனால் திரும்பவும் லட்சுமியை பார்க்க முரளி வரவும் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. அதனால்தான் கட்டையால் பலமுறை அடித்து கொன்றேன் என்றார்.

English summary
wife illegal love husband suicide and worker murdered near krishnagiri
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X