வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நாளை.. நாம் வெல்லலாம்!
வாழ்க்கை ரொம்ப சிம்பிள்ங்க.. நேற்று நம்மிடம் இல்லை.. அது போயாச்சு.. இன்று நிதர்சனம்.. நாளை அது நமக்கு சாதமாகவும் மாறலாம்.. அல்லது பாதகமாகவும் போகலாம்.
ஆனால் மேட்டர் என்னன்னா.. இன்று நீங்கள் எப்படி உழைக்கிறீர்களா அதுவே நாளைய உங்களது நிலையை உறுதி செய்யும்.. நாளை வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் இன்று நன்றாக உழையுங்கள்.. நேற்றைப் பற்றி கவலைப்படவே கூடாது.. இப்படிப்பட்ட பாசிட்டிவ் மன நிலைதான் உங்களை உயரத்திற்குக் கொண்டு போகும்.
நேற்று என்பது கையிலில்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நிஜம் அதனால் நாளை வெற்றிக் கிடைக்க வேண்டுமென்றால் இன்று நிச்சயம் அதற்காகக் கடுமையாகப் போராட வேண்டும். கடந்து போன காலத்தை எண்ணிக் கவலைப்படாமல் இன்றைய நாளில் நம் இலக்கை நோக்கிப் பயணம் செய்யுங்கள்.
நம்மில் பலருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருக்கும். அதை அடைய வேண்டுமென்றால் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பே நமக்கு உயர்வைத் தரும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் நம் சாதனைகளுக்கு வித்திட வேண்டும். நான் நேற்று அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று வருந்துவதை விட இன்று நான் என் வாழ்வு சிறக்க என்ன செய்யப் போகிறேன் என்று சிந்திக்க வேண்டும்.
இனிமே ஃபுல்லா சேலைதான்.. படுக்கையில் விரித்து வைத்து சிலாகிக்கும் கன்னிகா ரவி!
இன்று நாம் உழைக்கும் உழைப்பு நாளை வெற்றிக்கு அடித்தளமாகும். அதனால் போன காலத்தையோ அப்போது நடந்த நிகழ்ச்சிகளையோ எண்ணி மனம் வருந்தாமல் இன்று நாம் நம்முடைய வெற்றிக்கு என்ன செய்யப் போகிறோம் என்று யோசியுங்கள். கணவனை இழந்த பல பெண்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர்கள் இன்று போராடுகிறார்கள். நேற்று நடந்ததையெண்ணியே இருந்திருந்தால் நம்மால் இன்று சிறப்பான செயல்களைச் செய்ய முடியாது.
நேற்று என்பது கடந்தது இன்று உங்கள் கையில் நாளை எப்படியோ. அதனால் இன்று உங்கள் மனதை இனிமையாக்கி உங்களுடைய ஆற்றலின் மூலம் உங்கள் செயல்களில் ஈடுபடுங்கள். நாளைய வெற்றி உங்களுக்குத்தான்.