லண்டன் குமுதாவுக்கு துரத்தி துரத்தி லவ் டார்ச்சர்... ரோகித் சர்மாவுக்கு 29 மாசம் ஜெயில்
லண்டன்: காதல் செய்தே ஆக வேண்டுமென இங்கிலாந்து பெண்ணுக்கு மாதங்களாக துரத்தி துரத்தி லவ் டார்ச்சர் செய்து வந்த இந்தியருக்கு 29 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஏன் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் விட்டுல அவ இருந்தாலே லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியலை'.. என்று விஜய் சேதுபதி, சினிமா படம் ஒன்றில் கதாநாயகியான நந்திதாவை விடாமல் டார்ச்சர் செய்வார்.
அப்படி ஒரு லவ் டார்ச்சரை இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் லண்டன் பெண் ஒருவர் அனுபவித்துள்ளார்.
காமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்
கடையில் வேலை
இந்த கதையை லண்டன் போலீஸ் கூற்றின்படி, கடந்த 2017ம் ஆண்டு நம்பரில் இருந்து துவக்கினால் நன்றாக இருக்கும், ஏனெனில் அப்போது தான் இந்தியாவைச் சேர்ந்த ரோகித் சர்மா லண்டன் அழகியை பார்த்தார். 20 வயது வெள்ளைக்காரியான அந்த பெண் ( போலீஸ் பெண்ணின் பெயரை குறிப்படவில்லை, அதனால் குமுதா என பெயர் மாற்றப்பட்டுள்ளது), லண்டனின் வெம்ளே நகரில் ஒரு கடையில் ரோகித் சர்மாவுக்கு பொருட்களை சப்ளை செய்துள்ளார்.
மறுத்த லண்டன் பெண்
ரோகித் சர்மாவுக்கு குமுதாவை பார்த்த உடன் பிடித்து போய்விட்டது. தனது அப்பாவுடன் நேராக அன்றைக்கே சென்று குமுதாவை சந்தித்து திருமணம் செய்ய விரும்புவதாக கூயிருக்கிறார். ஆனால் அதற்கு லண்டன் குமுதா மறுத்துவிட்டார். அதன் பிறகு நான்கு நாட்களில் அந்த பெண் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலையில் சேர்ந்தார்.
லவ் மெசேஜ்
ஆனால் விடாத சர்மா குமுதா வேலை செய்யும் இடத்தை கண்டுபிடித்ததோடு, அவரது போன் நம்பரையும் வாங்கிவிட்டார். அதன் பின்னர்தான் சர்மாவின் சேட்டை அதிகமானது. நம்மூர் காதலர்கள் காதலியை லவ் டார்ச்சர் செய்ய மெசேஜ் அனுப்பியும், சோசியல் மீடியாக்களில் கருத்து படங்கள் போட்டு அனுப்புவார்களோ, அதேபோல் லண்டன் குமுதாவுக்கு ரோகித் சர்மா விடாமல் அனுப்பி டார்ச்சர் உள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு
2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுமை இழந்த அந்த பெண்ணும் போலீசில் புகார் சொன்னார். இதையடுத்து நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம் சர்மாவுக்கு எதிராக இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்ததாக வழக்கினை பதிவு செய்தது. எனினும் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஆனாலும் ரோகித சர்மா விடாமல் குமுதாவை லவ் டார்ச்சர் செய்துள்ளார். மேலும் அந்த பெண் மீண்டும் வேலையைவிட்டு போனாலும் அங்கும் வந்து திருணம் செய்தே ஆகணும் என்று மிரட்டி உள்ளார்.
சர்மாவுக்கு நோட்டீஸ்
இதனால் வெறுத்துப்போன குமுதா லண்டன் நீதிமன்றத்திலும் போலீசிலும் தனக்கு நடந்தவற்றை சொல்லி குமுறி உள்ளார். இதனிடையே லண்டன் நீதிமனறம் இந்த வழக்கில் ஆஜராகுமாறு சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு அவர் ஆஜராகவில்லை.
40முறை அழைப்பு
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமனறம்., ரோகித் சர்மா 40 முறை அந்த பெண்ணுக்கு பல்வேறு நம்பர்களில் இருந்து தினமும் போன் செய்து வந்துள்ளார். மேலும் அந்த பெண் எங்கு எல்லாம் வேலைக்கு செல்கிறாரோ அங்கெல்லாம் வந்து தொந்தவு கொடுத்துள்ளார். மனரீதியாக அந்த பெண்ணை தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓழுங்கீனமாக இருந்துள்ளார். எனவே சர்மாவுக்கு இந்த நீதிமன்றம் 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கிறது. மேலும் அவரை சிறை தண்டனை முடிந்தவுடன் இந்தியாவுக்கு அனுப்பவும் உத்தரவிடுவதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.