பிரான்சில் சுகாதார அவசர நிலை.. 'பேரழிவை நோக்கி' ஜெர்மனி.. கொரோனா 2வது அலையில் தத்தளிக்கும் ஐரோப்பா
லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. மிகப்பெரிய பேரழிவு என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வார்னிங் செய்துள்ளார். பிரான்ஸ் நாடு மீண்டும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அங்கு தொற்றை கட்டுப்படுத்துவதில் இதுவரை வெற்றி கண்ட பல நாடுகளிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக ஒரே நாளில் 5,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்று கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 3,5000 அளவுக்கு அதிகரித்துள்ளது.
மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்.. ஷாக் நிலவரம்
பிரான்சில் சுகாதார அவசர நிலை
கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அவசரகால நிலையை மீண்டும் கொண்டுவர உள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். தொலைக்காட்சியில் தோன்றி அவர் மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். சனிக்கிழமை முதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும். அமைச்சரவைக் கூட்டத்தின் நிமிடங்களின்படி புதன்கிழமை.
ஜெர்மனி பேரழிவு
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் கேஸ்களுக்கு இடையே, பிராந்திய தலைவர்கள் தனது கடுமையான புதிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் கையெழுத்திட மறுத்ததை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கண்டித்துள்ளார். இதனால் ஜெர்மனி 'பேரழிவு'க்கு செல்வதாக ஏஞ்சலா எச்சரித்துள்ளார்.
இத்தாலியில் மோசம்
கொரோனா வைரஸ் இறப்புகள் இத்தாலியில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளன, மேலும் ஐரோப்பாவில் குறைந்தது 10 நாடுகளில் வியாழக்கிழமை அதிகபட்சமாக தினசரி தொற்றுகள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ் 30,621 புதிய கேஸ்களுடன் பெரிய அளவுக்கு கேஸ்கள் அதிகரிப்பை சந்தித்துள்ளது.
லண்டனில் அலர்ட்
போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குரோஷியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை வியாழக்கிழமை மிக அதிக தினசரி கொரோனா கேஸ்களை பதிவு செய்தன. இதனால், நாளை முதல் லண்டனில் ஹை அலர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.