ஒருத்தரும் வர மாட்டேங்கிறாங்க.. கஷ்டமா இருக்கு.. கையில் காசே இல்லை.. புலம்பும் விபச்சார பெண்கள்!
லண்டன்: "வீட்டிலேயே இருப்பதால் இளைஞர்கள் வர மாட்டேன் என்று சொல்கிறார்கள். எங்களுக்கு கஷ்டமா இருக்கு" என்று புலம்ப ஆரம்பித்துள்ளனராம் விபச்சாரப் பெண்கள். இது இங்கிலாந்தில் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்.
Recommended Video
கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் விபச்சாரப் பெண்களும் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இப்போது சுத்தமாக யாரும் வருவதில்லை என்பதாலும், எங்கும் போக முடியவில்லை என்பதாலும் பெரும் சிரமத்தில் உள்ளனராம்.
வழக்கமாக இருக்கும் பிசினஸ் நடக்காமல் போய் விட்டதால் இவர்கள் கையில் காசு புழங்கவில்லை. வழக்கமான நாளாக இருந்திருந்தால் நிறைய இளைஞர்கள் வருவார்களாம். ஆனால் இப்போது எல்லோரும் வீட்டுக்குள் குடும்பத்தோடு அடைந்து கிடப்பதால் அதற்கான வழிகள் அடைக்கப்பட்டு விட்டதாம்.
கொரோனா.. 3 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது இந்தியா.. சுகாதாரத் துறை அதிரடி அறிவிப்பு
கஸ்டமர்கள்
சரி விர்ச்சுவல் செக்ஸ் எனப்படும் ஆன்லைன் செக்ஸாவது பெரிதாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் ஆப்பு வந்திருக்கிறது. அதாவது வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் மொத்தமாக குழுமி இருப்பதால் ஆன்லைன் செக்ஸ் பக்கமும் யாரும் வர முடியாத நிலை. இதனால் அதிலும் மண் விழுந்துள்ளதாம். இதுகுறித்து செக்ஸ் சாட் செய்து சம்பாதிக்கும் பெண் ஒருவர் சொன்னதாவது:
கல்யாணம்
"என்னோட கஸ்டமர் யாருமே என்னுடன் இப்போது பேசுவதில்லை. காரணம் கேட்டால் வீட்டில் ஆட்கள் இருக்காங்க என்று சொல்கின்றனர்" என்று புலம்புகிறார்.அதேபோல முன்பெல்லாம் விபச்சாரப் பெண்களைத் தேடி வரும் கல்யாணமான ஆண்களும் கூட இப்போது வர முடியாமல் வீட்டுக்குள் சிக்கியுள்ளதால் அந்த வகையா கஸ்டமர்களும் வருவதில்லையாம். ஒரு விபச்சாரப் பெண் கூறுகையில், "நான் வழக்கமாக பேசும் நபரிடம் பேசினால் அவர் சரியாகவே பேசவில்லை.
பயம்
காரணம் மனைவி இருக்கிறார்" என்று கூறி போனை வைத்து விட்டார் என்று சொல்கிறார். இப்படி பல கேஸ்கள் போய் விட்டதால் காசுக்கு வழியில்லாமல் போய் விட்டதாம் இப்பெண்களுக்கு... இங்கிலாந்தில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அதிகம். அதன் மூலம் வருவாய் ஈட்டுவோரும் அதிகம். இதை பிழைப்பாக வைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துத்தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நிதியுதவி
இவர்களுக்குத்தான் இப்போது பாதிப்பு அதிகமாக இருக்கிறதாம். இங்கிலாந்து அரசு நிதி உதவி பெறத் தகுதியுடைய தொழில்கள் வரிசையில் விபச்சாரத்தை சேர்க்கவில்லையாம். இதனால் இவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். எங்களையும் நிதி உதவி பெறுவோர் பட்டியலில் சேருங்க என்று இவர்கள் கோரிக்கை வைக்கிறார்களாம்.