வெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையில் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ்
லண்டனில் பிரபலமான பார்க் ஒன்றில் பட்டப்பகலில் ஒரு ஜோடி செய்த காமலீலை வீடியோ வைரலாகி வருகிறது. அந்த ஜோடியை கைது செய்த போலீசார், அந்த காட்சியை கண்ணால் கண்ட சாட்சியை தேடி வருகின்றனர்.
லண்டன்: இங்கிலாந்தில் பட்டப் பகலில் பார்க் ஒன்றில், ஓவர் மூடு ஆகி புல்வெளியில் காமலீலை செய்த ஜோடியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருந்தால் வந்து சாட்சி சொல்லுங்களேன் என்று போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
லண்டனின் ஆக்ஸ்போர்ட்ஷயர், மாகாணத்தின் பிசெஸ்டர் நகரில் உள்ள பிங்கிள் பீல்ட் என்ற இடத்தில்தான் இந்த அக்கப் போர் அரங்கேறியுள்ளது. அன்று அந்த பார்க்கிற்கு போனவர்களுக்கு கிளுகிளுப்பான காட்சி கண்ணில் பட்டது. அதிர்ச்சியுடன் சில பார்த்தனர். சிலர் தலையில் அடித்துக்கொண்டு ஓடினர்.
யாராவது பார்த்து விடப் போகிறார்களே என்று கூட இந்த ஜோடி கவலையே படவில்லை. மாறாக தங்களது வேலையே முக்கியம் என்று கருதி முழுமையாக முடித்து விட்டு பிறகே எழுந்து போயுள்ளனர்.
வீடியோ எடுத்த நபர்
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர், மாகாணத்தின் பிசெஸ்டர் நகரில் உள்ள பிங்கிள் பீல்ட் என்ற இடத்தில் வெட்கங்கெட்டத்தனமாக அந்த ஜோடி செய்த வேலையை நூறு பேர் கூடி நின்று பார்த்துள்ளனர். இவர்களின் காம லீலையை யாரோ ஒருவர் படம்பிடித்து விட்டார். அதை வைத்துத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூடு வந்த ஜோடி
சம்பவத்தில் சிக்கிய இருவரும் நடுத்தர வயது உடையவர்கள் . பொதுப் பூங்காவுக்குப் போன அவர்களுக்கு அங்கு வைத்து மூடு ஆகி விட்டது.
இடம் பொருள் ஏவல் பார்க்காமல் உடனே அந்த ஜோடி வேலையில் இறங்கி விட்டது. முதலில் அந்தப் பெண் வாய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அதனால் இன்னும் சூடாகிப் போன அந்த ஆண், அப்பெண்ணை அப்படியே பின்னால் தள்ளி படுக்க வைத்து வேலையை ஆரம்பிக்கிறார்.
வைரல் வீடியோ
அந்த காம லீலை வீடியோவை எடுத்தவர், நெட்டில் லீக் செய்த பற்றிக்கொண்டது. பிறகென்ன சமூக வலைதளங்கள் மூலம் பரபரப்பாக படு சூடாக வைரலாகி விட்டது. இதில் என்ன காமெடி என்றால் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவருடன் சிலர் கூடி நின்று லைவ் கமெண்டரி கொடுத்ததுதான்.
வழக்கு போட்ட போலீஸ்
இது நல்லாருக்கே என்று சொல்கிறார் ஒருவர். கொடுமை என்று தலையில் அடித்துக்கொண்டு போகிறார் இன்னொருவர் இப்போது இந்த வீடியோ போலீஸ் வசம் போய் விட்டது. அவர்கள் வழக்குத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இருவரில் பெண்ணை மட்டுமே முதலில் கைது செய்தனராம். பின்னர் அந்த ஆணையும் கைது செய்துள்ளனர்.
பார்த்தவங்க யாரு
இந்த வழக்குக்கு இப்போது கண்ணால் பார்த்த சாட்சிகளைத் தேடி வருகின்றனராம் போலீஸார். இந்த கன்றாவியை யாராவது நேரில் பார்த்தவர்கள் இருந்தால் வந்து எங்களிடம் வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.
பார்க்கில் சுவாரஸ்யம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியின் பெர்லின் நகர பூங்கா ஒன்றில் பலர் நடமாடி வந்த பட்டப் பகலில் ஒரு காதல் ஜோடி மரத்துக்குக் கீழே வெட்ட வெளியில் முழு நீள உடலுறவில் ஈடுபட்ட செயல் பலரையும் திகிலடிக்க வைத்தது. பலர் கூடி வேடிக்கை பார்த்த நிலையில் இடையில் அந்த ஆண், தம் அடிக்க ஒருவர் வந்து லைட்டர் கொடுத்த சுவாரஸ்யமும் அரங்கேறியது. அந்த வீடியோவும் வைரலானது. இப்போது லண்டனில் ஒரு ஜோடி இந்த கூத்தை அரங்கேற்றியுள்ளது. பலர் பார்க்க உறவில் ஈடுபடுவதில் என்னதான் சுவாரஸ்யமோ தெரியலையே.