பார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா?
இங்கிலாந்தில் உரிமையாளரின் பணத்தை சாப்பிட்டு பிரபலமாகியுள்ளது நாய் ஒன்று.
Recommended Video
லண்டன்: உரிமையாளரின் பணத்தை சாப்பிட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று.
இங்கிலாந்து வடக்கு வேர்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜூடித் ரைட் என்பவர் ஓஷி என்ற லேப்ராடால் வகையின நாய் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ஜூடித்திற்கு வர வேண்டிய 160 பவுண்ட் பணத்தை அவரது தபால் பெட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் வைத்து விட்டுச் சென்றுள்ளனர். அப்போது ஜூடித் குடும்பத்தார் வீட்டில் இல்லாததால், அப்படி அவர்கள் செய்துள்ளனர்.
ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால், ஏற்கனவே பசியில் இருந்த அவர்கள் வீட்டு நாய், தபால் பெட்டியில் ஏதோ பொட்டலம் இருப்பதைக் கண்டதும் குஷியாகி விட்டது. 160 பவுண்டு பணத்தையும் அது மென்று தின்றுள்ளது. இந்திய மதிப்பில் அது சுமார் ரூ. 14,500 ஆகும்.
வீட்டிற்கு திரும்பியதும், நாய் தின்று போட்டு மீதமிருந்த பணத் தாள்களைக் கண்டதும் ஜூடித் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர், அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அந்நாயை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நாயின் சிகிச்சைக்கு என தனியாக 130 பவுண்டுகள் ( அதாவது இந்திய மதிப்பில் ரூ. 11,000) செலவாகியுள்ளது. ஆனால், நாயின் வயிற்றுக்குள் சென்ற பணத்தை எடுக்க இயலவில்லை.
இதற்கு முன்பு அந்த நாய் இப்படி பணத்தை சாப்பிட்டதில்லையாம். 'பணம் போனால் போகிறது, நல்வாய்ப்பாக நாயின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் மீட்டு விட்டோம்’ என ஜூடித் தெரிவித்துள்ளார். அதோடு, எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நடக்காதவண்ணம் முன்னேற்பாடுகளை செய்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நாயின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பார்க்க பாவம் போல் அது காட்சி தருகிறது.