ஐரோப்பிய நாடுகளில்... இன்று கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு..?
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இங்கிலாந்தில் இன்று ஒரே நாளில் 684 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இங்கிலாந்தில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3500-ஐ தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீள உலக நாடுகள் அனைத்தும் தங்களால் முயன்ற ஆகச்சிறந்த அத்தனை வழிமுறைகளையும் கையாண்டு வருகின்றன. அப்படியிருந்தும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியாமல் பல உலக நாடுகளும் தடுமாறுகின்றன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது தான் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,935-ஐ எட்டியுள்ளது. அதாவது இன்று மட்டும் ஸ்பெயினில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 587 ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 710 பேருக்கு ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 30,513 பேர் இந்த கொடிய நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதேபோல் ஈரானில் 53,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்த 3294 பேர் ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர், அதில் இன்று மட்டும் 134 ஆகும். மேலும், நெதர்லாந்தை பொறுத்தவரை 15,723 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 250 பேர் பரிபூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1487 பேர் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு நல்ல செய்தி இருக்கு.. பீலா ராஜேஷ் சொன்னதை பாருங்க
பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1143, அதில் இன்று மட்டும் என கணக்கில் எடுத்தால் 132 ஆகும். மொத்தம் 16,770 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2,872 பேர் இந்த நோயிலிருந்து பெல்ஜியத்தில் மீண்டுள்ளனர்.