மருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'
லண்டன்: கொரோனாவுக்கு எதிராக முன் களத்தில் நின்று போரிட்டு வரும், மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் ஊக்கப்படுத்துவது மற்றும் கவுரவப்படுத்தும் விதமாக, மதுரை அலப் 'பறை' குழுவினர் இன்று இரவு, லண்டன் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில், பறை இசை ஒலிக்க உள்ளனர்.
Recommended Video
லண்டனில் பறை இசை குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது, மதுரை அலப்பறை அமைப்பு. Madurai Alapparai என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் நடத்தி வருகிறது இந்த குழு.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தன்னலம் மறந்து சமூக பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் & செவிலியர்கள் மற்றும் அனைத்து சமூக பணியாளர்களையும் பாராட்டும் விதமாக மே 21 அன்று இரவு 8 மணிக்கு "மதுரை அலப்பறை" குழுவினர் தமிழர்களின் இசையான பறை இசை பாராட்டிசையாக இசைக்கப்படும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடன் வாங்காதீங்க.. கிரெடிட் கார்டு பயன்படுத்தாதீங்க.. வாசகர் தரும் சூப்பர் ஐடியா!
லண்டன், King George Hospital என்ற பிரபல மருத்துவமனையில் வைத்து அந்த நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு, இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்திய நேரப்படி, இது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியாகும்.