அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியில் உற்பத்தி பிழை - கோவிட் 19 மருந்தில் கடும் பின்னடைவு
அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டு உள்ள உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டுள்ளன.
லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ரா செனகாவின் கோவிட் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளவை என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு, அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்டு உள்ள உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டுள்ளன இது அவர்களின் சோதனை கொரோனா தடுப்பூசியின் ஆரம்ப முடிவுகள் குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.
உலகம் முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வேலை செய்கின்றன.
நவம்பர் 23 ஆம் தேதியன்று அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தாங்கள் உருவாக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி 70.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியது, சராசரியாக,கொரோனாவைத் தடுப்பதில், அதன் மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் நடத்தப்பட்டன. அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ஒரு கப் காபிக்கு குறைவாகவே செலவாகும் என்று கூறப்பட்டது.
இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். 90 சதவிகிதம் பலன் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
வரும் 2021ஆம் ஆண்டில் 300 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் 50 சதவிகிதம் இந்தியாவுக்கும் 50 சதவிகிதம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
உயரும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த மத்திய அரசு.. அதிரடி!
அஸ்ட்ராசெனகா கூறுகையில், ஆச்சரியமாக இரண்டு முழு டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும் குறைந்த டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களின் குழு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றியது.குறைந்த டோஸ்கள் பெற்ற குழுவில், தடுப்பூசி 90 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது. இரண்டு முழு டோஸ்களை பெற்ற குழுவில், தடுப்பூசி 62 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது என கூறி உள்ளது.
இங்குதான் கேள்வி எழுகிறது. தடுப்பூசியின் செயல்திறனில் வெவ்வேறு டோஸ்களில் ஏன் இவ்வளவு பெரிய மாறுபாடு இருந்தது, மேலும் ஒரு சிறிய டோஸ் ஏன் சிறந்த முடிவுகளைத் தோற்றுவித்தது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு தனது அறிக்கையில், குறைந்த அளவு பயன்படுத்தப்பட்டது தெளிவாகத் தெரிந்தபோது, அது கட்டுப்பாட்டாளர்களுடன் விவாதிக்கப்பட்டது, மேலும் இரண்டு விதிமுறைகளுடன் முன்னேற ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. "செறிவை அளவிடுவதற்கான முறைகள் இப்போது நிறுவப்பட்டுள்ளன, மேலும் தடுப்பூசிகளின் அனைத்து தொகுதிகளும் இப்போது சமமானவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் என்று பல்கலைக்கழகம் கூறுகிறது.
நல்ல செய்தி.. மத்திய அரசுக்கு 50% விலையில் ஜன-பிப்ரவரியில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்! ,
அஸ்ட்ரா செனகாவின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல், சோதனைகள் மிக உயர்ந்த தரத்திற்கு நடத்தப்பட்டதாக கூறினார். டோஸ்களில் ஏற்பட்ட பிழை ஒரு ஒப்பந்தக்காரரால் ஏற்பட்டது என்றும், அது கண்டுபிடிக்கப்பட்டவுடன், கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, தடுப்பூசியை வெவ்வேறு அளவுகளில் தொடர்ந்து பரிசோதிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசியின் முடிவுகள் தெளிவாக இல்லை என்று அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசியின் மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகள் வயதானவர்களிடமிருந்து தரவைப் பிரதிபலிக்கவில்லை என்பதை முதலில் வெளிப்படுத்தி உள்ளனர்.
புளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வாளரும் தடுப்பூசி சோதனை வடிவமைப்பில் நிபுணருமான நடாலி டீன் கூறும் போது அஸ்ட்ராசெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை முடிவுகளுக்கு வரும்போது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு மோசமான தரத்தைப் பெறுகின்றன என்று கூறியுள்ளார். இது கொரோனா தொற்று நோயினை தீர்ப்பதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.