கார் விபத்தில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஃபிலிப்… உயிர் பிழைத்த அதிசயம்
Recommended Video
லண்டன்:பிரிட்டன் இளவரசர் ஃபிலிப் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தின் சாண்டிரினாம் எஸ்டேட் பகுதியில் 97 வயதாகும் இளவரசர் ஃபிலிப் தமது பணியாளர்கள் 2 பேருடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, வளைவில் முந்த முயன்ற ஃபிலிப்பின் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
கோர விபத்திலிருந்து இளவரசர் ஃபிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரும், மீட்புப்படையினரும் இளவரசர் மற்றும் காயமடைந்த மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இளவரசரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறிய காயம் கூட ஏற்பட வில்லை என்று தெரிவித்தனர். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனையும் உறுதிபடுத்தியுள்ளது.
இளவரசர் ஃபிலிப் விபத்தில் சிக்கிய செய்தி வேகமாக பரவத் தொடங்கியதும் பிரிட்டன் மக்கள் உட்பட அரச குடும்ப பிரியர்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பிரார்த்தனையின் பயனாகவே இளவரசர் ஃபிலிப் உயிர் பிழைத்திருப்பதாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பிரிட்டனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, மனைவி மிட்செல் ஒபாமாவுடன் சுற்றுப்பயணம் செய்ததார். அப்போது இளவரசர் பிலிப் இருவரையும் தனது காரில் அவரே ஓட்டிச்சென்று மதிய விருந்துக்கு அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.