15 வயது சிறுவனுடன் உறவு.. 35 வயது பெண் கைது.. இன்ஸ்டாவில் 100 ஆபாச மெசேஜ்கள்.. விசாரணையில் திடுக்!
லண்டன்: 15 வயது சிறுவனை ஏமாற்றி அவருடன் உடலுறவு கொண்ட 35 வயது பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டன் கிழக்கு சூசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் கரோல் டெய்லர் (35). இவருக்கு 15 வயது சிறுவன் ஒருவன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளான். அந்த சிறுவனிடம் கரோல் பேசியுள்ளார். அந்த சிறுவனிடம் தினமும் கரோல் பேசியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சிறுவனை நேரில் பார்க்க வேண்டும் என கரோல் கூறியுள்ளார்.
'நாட்டுக்கு எதிராக சதி செய்யும் யூடியூப் சேனல்கள் முடக்கப்படும்'.. மத்திய அமைச்சர் அதிரடி வார்னிங்!
சிறுவனை ஏமாற்றிய பெண்
அந்த சிறுவனும் கரோல் கூறிய இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அந்த சிறுவனுடன் கரோல் இரு முறை உடலுறவு கொண்டதாக தெரிகிறது. இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என கூறி சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அவ்வப்போது சிறுவனுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு வந்து போக சொல்லியுள்ளார்.
செக்ஸ் டார்ச்சர்
ஒரு கட்டத்தில் கரோலின் இந்த செக்ஸ் டார்ச்சரை சிறுவனால் தாங்க முடியவில்லை. இதனால் பெற்றோரிடம் நடந்தவற்றை சொல்லியுள்ளார். அவர்கள் கரோல் மீது போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போது கரோலிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அந்த பெண் தினமும் 100க்கும் மேற்பட்ட மெசேஜ்களை இன்ஸ்டாகிராமில் சிறுவனுக்கு அனுப்பியுள்ளார்.
ஆபாச மெசேஜ்
அத்தனை மெசேஜ்களும் ஆபாசம் நிறைந்தவையாக இருந்ததை போலீஸார் அறிந்தனர். இதையடுத்து கரோல் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிறுவனை ஏமாற்றி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக கரோலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தண்டனை
கரோலுக்கு எதிராக ஆதாரங்களை சரியாக ஒப்படைத்து தைரியமாக புகார் கொடுத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. சிறுவனுக்கு 35 வயது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போல் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தண்டனைகள் தீவிரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.