வன்முறை சேதத்திற்காக ரூ.6.27 லட்சத்திற்கான காசோலை அளித்த முஸ்லிம் குடிமக்கள்.. உபி அரசு
லக்னோ: உத்தப்பிரதேசத்தின் புலந்தசாகரில் நடந்த வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட சேதத்திற்காக ரூ.6.27 லட்சத்திற்கான காசோலையை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அரசு அதிகாரிகளிடம் அளித்திருக்கிறார்கள் என உத்தரப்பிரதேச அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த வாரம் வெள்ளிக்கிமை தொழுகைக்கு பிறகு உத்தரப்பிரதேசசத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தது.
அப்போது போலீசாருக்கும் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையின் காரணமாக 21 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் முஷாபர்நகர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாவட்டம் புலசந்த்சாகர், இந்த மாவட்டத்திலும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) வன்முறை ஏற்பட்டது.
நான் உயிருடன் இருக்கும் வரை இங்கு குடியுரிமை சட்டம் அமலாகாது.. மம்தா பானர்ஜி ஆவேசம்
இந்த வன்முறையில் பேருந்துகள் உள்பட அரசின் பொதுச்சொத்துக்கள் தீவைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளால் சேதம் அடைந்தது. இதையடுத்து புலசந்த்சாகரைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குழுவாக ஒன்று சேர்ந்து நிதி திரட்டி ரூ.6.24 லட்சத்திற்கான காசோலையை அரசு அதிகாரிகள் குழுவிடம் அளித்திருக்கிறார்கள் என வீடியோ மற்றும் புகைப்படங்களை உத்தரப்பிரதேச அரசு வெளியிட்டிருக்கிறது.