உ.பி.யில் நள்ளிரவில் பயங்கரமான விபத்து.. கார் மீது லாரி மோதியதில் 14 பேர் உயிரிழப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் நள்ளிரவில் மிக பயங்கரமான விபத்து நடந்துள்ளது.
பிரதாப்கர் பகுதியில் உள்ள பிரதாப்கர்: மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் 6 குழந்தைகள் உட்பட பதினான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Comments
English summary
Pratapgarh: Fourteen persons including six children died after the vehicle they were travelling in collided with a truck on Prayagraj-Lucknow highway under limits of Manikpur police station last night.
Story first published: Friday, November 20, 2020, 7:18 [IST]