உன்னாவ் பாலியல் வழக்கு.. புகார் கூறிய பெண் மீது கொலை முயற்சி.. வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் வரிசையாக மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். அந்த உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உத்தர பிரதேச போலீஸ் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு மட்டும் தனியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னாவ் விபத்து படுகொலை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாஜக எம்எல்ஏ குல்தீப் உட்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் குல்தீப் தற்போது பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.