லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை!

அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இன்னும் 4 நான்கு நாட்களுக்கு வரிசையாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Section 144 Imposed In Ayodhya | அயோத்தியில் 144 தடை..காஷ்மீரை போலவே பாதுகாப்பு..என்ன நடக்கிறது?

    லக்னோ: அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இன்னும் 4 நான்கு நாட்களுக்கு வரிசையாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படும்.

    அயோத்தி வழக்கில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சமரசம் தோல்வியில் முடிந்தது. சமரச முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக மூவர் குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன?அயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது? அரசின் திட்டம் என்ன?

    கதை என்ன

    கதை என்ன

    1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

    மனுக்கள்

    மனுக்கள்

    இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூரியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட முடிவு

    கிட்டத்தட்ட முடிவு

    அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

    எப்போது முடியும்

    எப்போது முடியும்

    இந்த வழக்கில் இதுவரை விசாரணை மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அனைத்து தரப்பும் தினமும் வாதங்களை வைத்தனர். விடுமுறை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. பல்வேறு புதிய ஆதாரங்கள், வாதங்கள் இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டது.

    இன்று

    இன்று

    இந்த நிலையில் அயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இன்றோடு சேர்த்து வரிசையாக 4 நாட்களுக்கு இறுதிக்கட்ட விசாரணை நடக்கும். அக்டோபர் 17ம் தேதி வழக்கு விசாரணை முடிவிற்கு வருகிறது. நவம்பர் 17ம் தேதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு விசாரணை தொடங்க உள்ளது.

    English summary
    Ayodhya Case final hearing starts from today will end on October 14 in Supreme Court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X