மோடியையும், தடுப்பூசியையும் நம்பாதவங்க பாகிஸ்தான் போங்க... சொல்றது யாருனு பாருங்க!
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியையும், தடுப்பூசிகளையும் நம்பாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேசினார்.
உ.பி.யில் நடைபெறும் என்கவுண்டர்கள் மீது கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லை என்றும் அவர் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டின் சர்தானா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோம். அப்பகுதியில் நடந்த பா.ஜ.க. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:-
கொரோனா பரவல் காலச்சூழலில் நம் நாடு உள்ளது. இதை தடுக்க தடுப்பூசிகள் வந்து விட்டது.ஆனால் பாகிஸ்தானியர் மனநிலையில் உள்ள சிலர் இந்த தடுப்பூசிகளையும் எதிர்த்து வருகின்றனர்.
அவர்கள் நமது நாட்டையும், நமது விஞ்ஞானிகளையும், நமது போலீஸ் படையையும், பிரதமர் மோடியையும் நம்பவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்டவர்களின் ஆன்மா பாகிஸ்தானுக்கு சொந்தமானது. எனவே அவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும். உ.பி.யில் நடைபெறும் என்கவுண்டர்கள் மீது கேள்வி எழுப்புபவர்களுக்கு பரந்த அறிவு இல்லை என்று சங்கீத் சோம் தெரிவித்தார்.