இதுதான் முதல்முறை.. மோடியை நேரடியாக தாக்கி பேசிய பிரியங்கா.. என்ன சொன்னார் தெரியுமா?
முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
Recommended Video
லக்னோ: முதல்முறையாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பிரச்சாரம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்காக இன்றில் இருந்து உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார். கங்கை நதியில் படகில் சென்றபடி பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்து வருகிறார்.
மூன்று நாட்கள் நடக்கும் பிரச்சாரத்தில் முதல் நாளே பிரதமர் மோடியை தாக்கி பிரியங்கா பேசினார். கடைசி நாள் இவர் வாரணாசியில் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தலில் வெற்றி வாகை சூடுவாரா மு.க.ஸ்டாலின் - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் என்னென்ன
நாட்டின் எதிர்காலம்
பிரியங்கா தனது பேச்சில் நாம் வாக்களிக்கும் முன் யோசித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்தை அப்படியே மாற்ற கூடியது.
மாயாவதி குறித்து
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எங்கள் மீது கோபம் கொள்ள தேவையில்லை. இது கோபப்படுவதற்கான நேரம் கிடையாது. நம்முடைய ஒரே குறிக்கோள் பாஜகவை வீழ்த்துவது மட்டுமே. நாம் அதுதான் சேர்ந்து செய்ய வேண்டும்.
மோடி குறித்து
மோடி பணக்கார மக்களுக்காக ஆட்சி நடத்தி வருகிறார். தொழில் அதிபர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர் விவசாயிகளுக்காக திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அவர் ஏழை மக்களை கவனிக்கவில்லை.
யாருக்கு காவலாளி
பிரதமர் மோடி தன்னை காவலாளி என்று கூறுகிறார். தன் பெயருக்கு முன்னே டிவிட்டரில் காவலன் என்று போட்டுக்கொள்கிறார். அது அவரது விருப்பம். அவர் ஏதாவது செய்யட்டும். ஆனால் மோடி மக்களின் காவலாளி கிடையாது. அவர் பணக்காரர்களின் காவலாளி மட்டும்தான், என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.