லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுபோதையில் தந்தையின் கொடூரம்... இரண்டு மாதங்களே ஆன குழந்தையை அடித்துக் கொன்ற குடிகாரன்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இரண்டு மாத குழந்தையைத் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவேந்தர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டையிடுவார்.

Drunk Father Beats 2-Month-Old To Death With Stick In UP, Say Cops

நேற்றும், தேவேந்தர் அதேபோல குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி ரேணு, அவருடன் சண்டை போட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்த கம்பை எடுத்து மனைவி ரேணுவைத் தாக்கத் தொடங்கியுள்ளார். ரேணுவின் மடியில் தனது இரண்டு மாத குழந்தை இருப்பதைக்கூட அறியாது அந்தக் கொடூரன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குடிகாரனின் இந்தக் கொடூர தாக்குதல் காரணமாக அந்த இரண்டு மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

புதன்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து இந்திய தண்டை சட்டம் 304இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக உள்ள தேவேந்தரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

English summary
A two-month-old boy died after allegedly being beaten with a stick by his drunk father in a village in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X