நண்பனின் மனைவி மீது ஒரு கண்.. நள்ளிரவு.. துப்பாக்கி முனையில் பெண்ணை நாசம் செய்த 4 பேர்.. உ.பி. ஷாக்
நண்பனின் மனைவியை 4 பேர் வீடு புகுந்து நாசம் செய்துள்ளனர்
லக்னோ: நண்பனின் மனைவியை 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.. பின்னர் கத்தியால் கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளனர்.. தப்பி சென்ற இவர்களை உபி போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்திரபிரதேச மாநிலம் பரேலி நகருக்கு அருகே அமைந்துள்ள சிரொளலி என்ற கிராமத்தை சேர்ந்த 5 பேர் நெருங்கிய நண்பர்கள்.. சின்ன வயசில் இருந்தே பழக்கம்.. ஒன்றாக சுற்றி திரிந்தவர்கள்.
இவர்களில் ஒருவருக்கு மட்டும் திருமணம் ஆனது.. மற்ற 4 பேரும் நண்பனை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு செல்வார்கள்.. அப்போதுதான் உயிர் நண்பனின் மனைவி மீது 4 பேரின் பார்வையும் விழ தொடங்கியது. ரொம்ப நாளாகவே மனைவி மீது ஒரு கண் வைத்திருந்தனர்.. இதற்காக பிளான் பண்ணி நண்பனை ஜெயிலுக்கு அனுப்பவும் முடிவு செய்தனர்.
அதற்காக 1 கிலோ போதை பொருளை நண்பன் கடத்திவிட்டதாக போலீசில் பொய் புகார் அளித்தனர்.. அதன்படி போலீசாரும் அந்த அப்பாவியை பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டனர். இப்போது, 4 பேரும் நண்பனின் வீட்டுக்கு நடு இரவில் கிளம்பி சென்றனர்.. கையில் துப்பாக்கியையும் கொண்டு போனார்கள்.
துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியில் அவரது கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர்.. ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டு கொண்டே இருந்ததால், 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி செல்லும் போது இதுபற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.
"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்!
இதனால் பயந்து போன அந்தப் பெண் 2 நாட்கள் கழித்தே போலீசாரிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார்... போலீசாரும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.. ஒன்னுக்குள் ஒன்றாக பழகி வந்த நண்பர்களே ஸ்கெட்ச் போட்டு நண்பனை சிறைக்கு அனுப்பி விட்டு மனைவியை சீரழித்த கொடூரம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.