உ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்து மகாசபை அமைப்பின் கமலேஷ் திவாரி மீது அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்து மகாசபையின் தலைவரான சர்ச்சைக்குரிய கமலேஷ் திவாரி லக்னோவில் அலுவலகத்தில் இருந்தார். இன்று பிற்பகல் திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கமலேஷ் திவாரி, ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கமலேஷ் திவாரி உயிரிழந்தார்.
இது தொடர்பாக இந்து மகாசபை நிர்வாகிகள் கூறுகையில், திவாரியின் அவலுலகத்துக்கு பரிசுப் பொருள் கொடுப்பது போல இருவர் நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர் என்றனர்.
Lucknow: Hindu Mahasabha leader Kamlesh Tiwari critically injured after being shot at in his office. More details awaited. pic.twitter.com/KoQifAZW8X
— ANI UP (@ANINewsUP) October 18, 2019