ரேபரேலி என்ன? வாரணாசியில் போட்டியிடட்டுமா? தொண்டர்களிடம் ஷாக் கேள்வி கேட்ட பிரியங்கா காந்தி!
லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட தயார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
லக்னோ: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட தயார் என்று காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு பிரியங்கா காந்தியின் வருகைக்கு பின் காங்கிரஸ் கட்சி மனோரீதியாக பெரிய பலம் பெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாநில பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் அங்கு எதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாலினுக்கு அழகிரி.. உதயநிதிக்கு அதிமுக.. ஒரே நாளில் அப்பாவுக்கும் பையனுக்கும் இப்படியா நடக்கும்?
பிரியங்கா காந்தி பேட்டி
இரண்டு நாட்களுக்கு முன் பேட்டியளித்த பிரியங்கா காந்தி, எனக்கும் தேர்தலில் நிற்க விருப்பம் இருக்கிறது. என்னை தேர்தலில் நிற்க சொன்னால் நிற்பேன். கண்டிப்பாக கட்சி சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன். ஆனாலும் கூட எனக்கு கட்சிக்காக உழைக்கவே அதிக விருப்பம். கட்சியை வளர்க்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.
ஆலோசனை
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தொண்டர்களுடன் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் ஆலோசனை செய்தார். உத்தர பிரதேச வேட்பாளர்கள் குறித்தும், யாரை எங்கு போட்டியிட வைப்பது என்பது குறித்தும் ஆலோசனை செய்தார். உத்தர பிரதேச காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பிரியங்கா மிக முக்கிய பங்கு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன கேட்டனர்
இதையடுத்து பிரியங்கா காந்தியிடம் காங்கிரஸ் தொண்டர்கள் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும்படி கோரிக்கை வைத்தனர். ரேபரேலி தொகுதியில் எப்போதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திதான் போட்டியிடுவார். ஆனால் இந்தமுறை அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.
என்ன பதில்
இதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை கண்டிப்பாக செய்வேன். ஏன் ரேபரேலியில்தான் போட்டியிட வேண்டுமா? சொல்லுங்கள் வாரணாசியில் கூட போட்டியிடுகிறேன். வாரணாசியில் கூட நான் போட்டியிட தயார்தான், நீங்கள் ரெடியா என்று தொண்டர்களிடம் கேட்டார். அவரின் இந்த கேள்வி தொண்டர்களை மகிழ்ச்சிக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.