87-வது விமானப் படை தினம்- ஹிண்டனில் கண்கவர் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் #AirForceDay2019
லக்னோ: விமானப் படையின் 87-வது தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் ஹிண்டன் தளத்தில் கண்கவர் அணிவகுப்பு மற்றும் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாட்டின் விமானப் படை 1932-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தின் ஹிண்டன் விமான படை தளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஆசியாவின் மிகப் பெரிய விமான படை தளமான ஹிண்டனில் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
INDIAN AIR FORCE CELEBRATES 87th ANNIVERSARY https://t.co/3fdlRgxUIQ
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2019
இந்நிகழ்வுகளில் ராணுவ தளபதி பிபின் ராவத், விமான படை தளபதி பதாரியா மற்றும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்று பார்வையிட்டனர். முன்னதாக டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் விமானப் படை வீரர்களுக்கு முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
Indian Air Force (IAF) celebrates 87th anniversary on #AirForceDay2019 at Hindon Air Base in Ghaziabad. Army Chief General Bipin Rawat and IAF Chief, Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria present at the event. pic.twitter.com/w6GQLTJlKB
— ANI UP (@ANINewsUP) October 8, 2019