ஓட்டு போட வாங்க வாக்காள பெருமக்களே... பூ தூவி, டிரெம்ஸ் அடித்து வரவேற்ற அதிகாரிகள்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பக்பட் என்ற மக்களவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களார்களை, மலர்தூவி மற்றும் டிரெம்ஸ் அடித்து வரவேற்று வாக்களிக்க வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டமாக நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அசத்தும் தேர்தல் ஆணையம்.. அதிகாலையில் வாக்களித்த 5 பேருக்கு பதக்கம்.. வாக்காளர்கள் உற்சாகம்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
#WATCH Flower petals being showered and 'Dhol' being played to welcome voters at polling booth number 126 in Baraut, Baghpat. #LokSabhaElections2019 pic.twitter.com/UEvBcihB0B
— ANI UP (@ANINewsUP) April 11, 2019
அதில் ஒன்றான பக்பட் தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொகுதியில் உள்ள பரௌட் என்ற ஊரில் 126 வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காள பெருமக்களை வரவேற்கும் விதமாக அவர்கள் மீது அதிகாரிகள் பூக்களை தூவினர். பின்னர் டிரெம்ஸ் அடித்தும் வரவேற்பு அளித்தனர். இதனை கண்டு ஆச்சர்யமடைந்து மகிழ்ந்த மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து வருகிறார்கள்.
தேர்தலில் வாக்களிக்க வைக்க தேர்தல் அதிகாரிகள் பல வித்தியாசமான விஷயங்களை கடைபிடித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர்கள் மீது பூக்களை தூவி வரவேற்ற செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.