லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வலியால் துடிக்கும் 3 மாத குழந்தை - சிகிச்சைக்கு பணமில்லாமல் கொலை செய்ய தாய் கைது

மருத்துவ சிகிக்சை செய்ய பணமில்லாமல் வலியால் துடித்த 3 மாத மகனை மாடியில் இருந்து வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் வறுமையில் வாடிய பெண் ஒருவர் கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை செய்ய பணல்லாமல் மகனின் வேதனை தாங்காமல் மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து வீசி கொலை செய்திருக்கிறார். சிசிடிவியில் பதிவான

காட்சிகளை வைத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

Lucknow woman throws sick son from hospital

கொடிது கொடிது வறுமை கொடிது என்பார்கள். வறுமையோடு நோயும் வந்தால் வேதனை தாங்கமுடியாததுதான். இன்றைக்கு மருத்துவ செலவுகளுக்காக பல லட்சம் செலவாகிறது. மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தனது முன்று மாத பிள்ளையை வீசி கொன்றுள்ளார் ஒரு பெண். உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த தம்பதியருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நன்றாக இருந்த அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலமில்லாமல் போனது.

குழந்தையை எடுத்துக்கொண்டு கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்றார் அந்த பெண். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மஞ்சள்காமாலை என்று சொன்னார்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் நிறைய செலவாகும் என்றும் கூறி விட்டனர்.

கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன் கள்ளக்காதலனுக்கு பணம் கொடுத்து விட்டு திருப்பி கேட்ட பெண் - கொலை செய்து புதைத்த கொடூரன்

குழந்தையை வைத்துக்கொண்டு வேதனைப்பட்ட அந்த பெண் திடீரென அந்த குழந்தையை காணவில்லை என்று கூறி அழுதார். மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை தேடிப்பார்த்தனர். சிசிடிவி காட்சியில் தேடியபோது அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு போன ஒரு பெண் அதை மாடியில் இருந்து கீழே வீசியது தெரியவந்தது. அது யாரென்று பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையின் தாயே வீசி கொலை செய்தது தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவரே தனது மனைவியின் செயலைப்பற்றி போலீசில் புகார் அளிக்கவே, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் பெற்ற தாயே தனது குழந்தையை மாடியில் இருந்து வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
woman has been arrested for allegedly killing her 3-month-old son by throwing him from the fourth floor of a building in Lucknow.She was arrested based on a complaint filed by her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X