25 வயது மருத்துவ மாணவி மர்ம மரணம்.. தலை, கழுத்தில் காயம்.. மருத்துவரை கைகாட்டும் உறவினர்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் 25 வயது மதிக்கத்தக்க மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் லக்னோவிலிருந்து 220 கி.மீ. தூரத்தில் உள்ள ஜலான் நகரில் உள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்தவர் 25 வயது மருத்துவ மாணவி. இவர் லக்னோவிலிருந்து 220 கிமீ தூரத்தில் உள்ள கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். இவரை செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் மகளை காணவில்லை என கூறி போலீஸில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து போலீஸார் அந்த பெண்ணைத் தேடி வந்தனர்.
கல்லூரி
இந்த நிலையில் அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்கு அருகில் அவரது உடல் சடலமாக நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
தலை
அதில் அந்த பெண்ணிற்கு தலையிலும் கழுத்திலும் பயங்கர காயங்கள் இருந்தன. அந்த காயங்களை பார்க்கும் போது அவர் உயிரை காத்து கொள்ள மிகவும் போராடியுள்ளது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மருத்துவர்
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில் எங்கள் பெண்ணை ஜலானில் உள்ள மருத்துவர் ஒருவர் கொடுமைப்படுத்தி மிரட்டி வந்துள்ளதாக எங்கள் மகளே சொல்லியுள்ளார் என புகார் அளித்தனர். இதையடுத்து அந்த மருத்துவரை விசாரணைக்கு போலீஸார் அழைத்து சென்றனர்.
சிறுமி
கடந்த சில வாரங்களாக உத்தரப்பிரதேசத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 13 வயது பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு மிக கொடூரமான முறையில் கரும்பு காட்டுக்குள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தொடர் குற்றங்கள் நடந்து வருவது, பெண்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.