தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா?.. மோடி கேள்வி
லக்னோ: தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கக் கூட தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி பெற வேண்டுமா என்ன என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. 7-ஆம் கட்டமாக குஷி நகரில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
தமிழ் மாணவர்களால் டெல்லியில் கல்வி உரிமை பறிபோகிறதா?.. கேஜ்ரிவாலுக்கு ஒரு "பொளேர்" கடிதம்!
மோடி
அப்போது அவர் பேசுகையில் காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் நமது ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளை மோடி கொன்றுவிட்டதாக சிலர் கவலை கொள்வர்.
அனுமதி
பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நம் வீரர்களை தாக்க வரும் போது பதிலடி கொடுக்க நமது வீரர்கள் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டுமா என்ன?.
விவகாரம்
மாயாவதி அவர்களே! நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் உங்களுக்கு தெரியும்.
|
முதலைக் கண்ணீர்
அப்படியிருக்கும் போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்துள்ள ஆதரவை நீங்கள் ஏன் இன்னும் வாபஸ் பெறாமல் உள்ளீர்கள். வெற்று அறிவிப்புகள் மூலம் மட்டுமே முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள் என மோடி தெரிவித்தார்.