எம்பி ஸ்மிருதி ராணியை "காணவில்லை".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்
லக்னோ: எம்பி ஸ்மிருதி ராணியை காணவில்லை என்று அவரது சொந்த தொகுதியிலேயே அச்சடித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. "அமேதி தொகுதி என்ன உங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாக போய் விட்டதா?" என்றும் வாசகங்களுடன் அந்த போஸ்டர் பரபரக்கிறது!!
கடந்த மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஸ்மிருதி ராணி... பாஜகவின் செல்வாக்கு மிக்கவர். இப்போது மத்திய அமைச்சராக இருக்கிறார்.
பல்வேறு அதிரடிகளுக்கு மட்டுமல்லாமல், சர்ச்சைகளுக்கும் பெயர் பெற்றவர் ஸ்மிருதி ராணி.. இந்நிலையில், இவர் சம்பந்தமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த போஸ்டர் பிளாக் & ஒயிட் கலரில் உள்ளது.. "அமேதி தொகுதி எம்பி ஸ்மிருதி ராணியை காணவில்லை'' என்று கொட்டை எழுத்தில் தலைப்பு போட்டு அந்த போஸ்டர்களை தொகுதி முழுக்க ஒட்டியுள்ளனர்...
மேலும், "கடந்த முறை தேர்தலில் ஜெயித்த பிறகு இந்த பக்கம் வரவே இல்லை.. இந்த 2 வருஷத்தில் 2 நாட்கள் மட்டுமே.. 2 மணி நேரம் மட்டுமே தங்கி இருந்து, அமேதியில் உங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டு போனீர்கள்.. அதற்கு பிறகு எங்கே சென்றீர்கள்? என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் உள்ளன.
"அமேதி தொகுதி என்ன உங்களுக்கு டூரிஸ்ட் ஸ்பாட்டாக போய் விட்டதா?" என்றும் வாசகங்கள் உள்ளன.. சொந்த தொகுதியிலேயே எம்பியை இப்படி கேள்விகளை கேட்டு போஸ்டர் ஒட்டியது யார் என தெரியவில்லை.. இந்த போஸ்டரை அரசியல் ரீதியாக யார் ஒட்டியிருந்தாலும், உண்மையிலேயே எம்பி தொகுதி பக்கம் வரவே இல்லை என்கிறார்கள் மக்களும்.
சர்ச்சுக்கு நடந்து சென்ற டிரம்ப்.. பாதுகாப்பிற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசிய போலீஸ்
கொரோனா பாதித்து இவ்வளவு அவஸ்தை பட்டு வருகிறோம், ஆனால், ஸ்மிருதி ராணி இங்கே வரவேயில்லை என்று தொகுதி மக்களே மனம் நொந்து சொல்கிறார்களாம். உபி முழுக்க இந்த காணவில்லை போஸ்டரால்தான் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.