லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாயை கூட விட்டு வைக்காத ராட்சசர்கள் - உருக்குலைந்த குட்டிப்பப்பி

நாட்டில் ஐந்து வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இப்போது நாய்க்கு கூட பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் சந்தோஷ் தேவி என்பவரின் வீட்டில் செல்லமாக வளர்த்த பொமரேனியன் நாய் குட்டி உருக்குலைந்து கிடைந்தது. என்ன ஆச்சு செல்லத்துக்கு என்று பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியடைந்தார் காரணம் நாயின் உருப்புகள் சேதமடைந்திருந்தன. சில ஆண் மிருகங்கள் வலுக்கட்டாயமாக நாயுடன் உறவு கொண்டது தெரியவந்தது.

சந்தோஷ் தேவிக்கு நாய் என்றால் உயிர். பொமரேனியன் நாயை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு அந்த நாய் சிதைந்து போயிருந்தது. இதற்குக் காரணம் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று கொடூரர்கள்தான் என்று தெரியவந்தது.

Three People Booked for molested Dog in UP

தினேஷ் குமார் என்பவன் தனது இரண்டு நண்பர்களுடன் வசித்து வருகின்றனர். குடி போதையில் இருந்த அவர்களின் கண்களில் அந்த பொமரேனியன் நாய் பட்டது. முட்டையை நாய்க்கு கொடுத்து விட்டு அதனை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு போய் அதனை கொடுமை படுத்தியிருக்கிறான்.

வியாழக்கிழமை இரவு முழுவதும் நாயை காணமல் தவித்த சந்தோஷ் தேவி, வெள்ளிக்கிழமையன்று காலையில் தினேஷ் குமாரின் அறையில் மயக்க நிலையில் இருந்த கண்டு பிடித்தார். பதறிப்போன சந்தோஷ் தேவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கே நாயை பரிசோதித்த மருத்துவர்கள், உள்ளுறுப்புகள் காயமடைந்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

நாயை சிதைத்த கொடூரர்களான தினேஷ் அவனது நண்பர்கள் மீது சந்தோஷ் தேவி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் மூவரும் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். மூவர் மீதும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை என்று நினைத்தால் வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்க்குக் கூட பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
An FIR has been registered against Dinesh Kumar and two unidentified persons under Section 11 in Prevention of Cruelty to Animals Act and Section 377 of the Indian Penal Code. Devi said her pet dog went missing on Thursday night and she found her dog lying unconscious in Kumar's room on Friday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X