ராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு பேரை சிறிய வாக்குவாதத்துக்காக உணவ ஊழியர்கள் நடுரோட்டில் சரமாரியாக கட்டைகளால் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டு ராணுவ வீரர்கள் பக்பத் நகரில் உள்ள உணவகத்துக்கு நேற்று சென்றுள்ளனர். ஒரு ராணுவ வீரர் சிகப்பு நிற பையும் மற்றொரு வீரர் பச்சை நிற குர்தாவும்அணிந்து இருந்தனர். அப்போது உணவகத்தில் அங்கிருந்த ஊழியர்களுடன் சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த உணவக ஊழியர்கள் திடீரென ராணுவ வீரர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். சிகப்பு நிற பை வைத்திருந்த ராணுவ வீரர் உணவ ஊழியர்கள் மற்றொரு ராணுவ வீரரை தாக்குவதை தடுக்க முயன்றார்.
#WATCH Baghpat: Two Army jawans(one with a red bag and one in green kurta) thrashed by restaurant employees yesterday after a minor argument.More than 7 people have been arrested by Police. (Note: Abusive language) pic.twitter.com/Of0oaDWdr5
— ANI UP (@ANINewsUP) June 2, 2019
அவரையும் கொடூரமாக அவர்கள் தாக்கினர். கட்டைகளாலும், கைகளாலும் ஆவேசமாக ராணுவ வீரர்களை பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டதை யாரும் விலக்கவில்லை. பச்சை குருதா அணிந்திருந்த ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் அடி வாங்கியபடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த பக்கம் வந்தீங்க.. அடிச்சு ஓட விட்ருவோம் பார்த்துக்கோங்க.. காளியம்மாள் ஆவேசம்!
இதையடுத்து பக்பத் போலீசார் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு, தாக்குதுலை நடத்திய உணவக ஊழியர்கள் ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.