உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வரவேண்டும்.. உன்னாவ் பெண்ணின் சகோதரி
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்தால்தான் சகோதரியின் உடலை அடக்கம் செய்வோம் என உன்னாவ் பெண்ணின் சகோதரி கூறியுள்ளார்.
உ.பி.யின் உன்னாவ் நகரில் 5 பேரால் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அப்பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது உ.பி. அரசு. இந்தநிலையில் அப்பெண்ணின் சகோதரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களை நேரில் வந்து சந்திக்க வேண்டும். எங்களுக்கு என்ன நீதி கிடைக்கும் என்பது குறித்து உடனடியாக முடிவைத் தெரிவிக்க வேண்டும்.
Sister of Unnao rape victim: Till the time Yogi Ji doesn't come here we will not cremate my sister. I want to speak to Yogi Ji in person. I want a government job and the accused should be hanged. pic.twitter.com/DYBbh1KRf1
— ANI UP (@ANINewsUP) December 8, 2019
யோகி ஆதித்யநாத் இங்கு வரும் வரை எனது சகோதரியின் உடலை தகனம் செய்ய மாட்டோம். எனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.