அடேங்கப்பா.. என்னா அடி.. நடுரோட்டில் தாறுமாறாக அடித்துக் கொண்ட கடைக்காரர்கள்.. வைரல் வீடியோ!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாக்பட்டில் கடைக்காரர்களுக்குள் ஏற்பட்ட தகராறு வன்முறையாகி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் பாக்பட் நகரில் ஏராளமான கடைகள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் இன்றைய தினம் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
கையில் கிடைத்த கம்பு, பைப் கொண்டு தாக்குதல் நடத்திய அந்த இடமே போராட்டக்களமாக மாறியது. இந்த வன்முறையால் ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்கள் எதற்காக அடித்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
Shopkeepers in UP's Baghpat engage in hand-to-hand combat using lathis, pipes, etc. A dozen injured in the violence @Uppolice pic.twitter.com/0S9irgil1Z
— Sandeep Rai (@RaiSandeepTOI) February 22, 2021
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீஸாரும் கைகலப்பில் ஈடுபட்டோரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.