லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓட்டலில் அடைத்து வைத்து ஒரு மாதமாக விதவையை பலாத்காரம் செய்த பாஜக எம்எல்ஏ.. அதிர்ச்சி

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உன்னாவ் பாணியில் மீண்டும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறி உள்ளது. பாஜக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி, ஒட்டலில் அடைத்து வைத்து விதவையை பலாத்காரம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர் மீது படோஹி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படோஹி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). விதவைப் பெண்னான இவர் கடந்த 10ம் தேதி அங்குள்ள போலீஸ் ஸ்டேனில் பாஜக எம்எல்ஏ மீது புகார் அளித்தார்.

கல்யாணம் செய்வதாக கூறி

கல்யாணம் செய்வதாக கூறி

அவர் தனது மனுவில், படோஹி தொகுதியின் எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி. இவர் பாஜகவைச் சேர்ந்தவர். இவருடைய மருமகன் சந்தீப் திவாரி எனனை கடந்த 2016ம் ஆண்டு பலாத்காரம் செய்தார். அப்போது நான் அவரை பற்றி புகார் அளிக்காமல் இருந்தால் கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதை நம்பி நானும் அவர் மீதான புகாரை வாபஸ் பெற்றேன்.

ஒரு மாதம் பலாத்காரம்

ஒரு மாதம் பலாத்காரம்

அதன்பின்னர் கடந்த 2017ம் ஆணடு உத்தரப்பிரதேச மாநில சட்டபை தேர்தல் நடந்தது. அப்போது சந்தீப் திவாரி , அவருடைய மாமனார் ரவீந்திர நாத் திரிபாதி உள்பட 7 பேர் என்னை ஒரு ஓட்டலில் சிறை வைத்து ஒரு மாதமாக தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

இதனால் கர்ப்பம் அடைந்த என்னை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்தார்கள். இது தொடர்பாக எம்எல்ஏ ரவீந்திர நாத் திரிபாதி உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரை விசாரிணை நடத்திய படோஹி போலீஸார், பாஜக எம்எல்ஏ உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

அந்த பெண்ணிடம் மாஜிஸ்ரேட் முன்பு வாக்கு மூலம் பெற்று அதன் அடிப்படையில் 7 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்ககப்படும் அந்த மாவட்ட எஸ்பி ரவீந்திர வர்மா தெரிவித்தார். முன்னதாக உன்னாவ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் பலாத்காரம் செய்ததால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த விவகாரம் உத்தரப்பிரதேசதை தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண்ணின் தந்தை உள்பட பலரும் இறந்து போனார்கள்.

English summary
Uttar Pradesh BJP MLA Ravindra Nath Tripathi and his son-in-law booked for raping woman in hotel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X