உ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. ! போலீசார் வழக்கு பதிவு
லக்னோ: உத்தர்ரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 40வயது பெண் ஒருவர் அண்மையில் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் 2017-ம் ஆண்டு படோஹி தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் ஹோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைத்து 1 மாதமாக பலாத்காரம் செய்தனர் என கூறியிருந்தார்.
இதனால் தாம் கர்ப்பமானதாகவும் பின்னர் அதை கட்டாயப்படுத்தி கலைத்தனர் என்றும் அப்பெண் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ. விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உ.பி.யில் பலாத்கார வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர் சிக்கி சிறையிலடைக்கப்ப்ட்டார். அவர் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.